நெய்தல் பனை அங்காடி
அனைவருக்குமான மரபு உணவு




பொருட்கள்
எங்கள் பனை உணவுப் பொருட்கள், பனையின் தாயகமான தமிழகத்தின் நெய்தல் நிலத்தில் தயாரிக்கப்பட்டவை.
மரபு முறையில் பனை வித்தகர்கள் மற்றும் குடும்பத்தினராலேயே தயாரிக்கப்படுபவை.
வேதிப் பொருட்களோ, பிற இனிப்பூட்டிகளோ சேர்க்காமல் தூய்மையான பதநீர் மட்டும் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
உணவே மருந்து

நெய்தல் - ஓர் அறிமுகம்
நெய்தல் - ஐந்திணைகளுள் ‘கடலும் கடல் சார்ந்த’ நிலத்திற்கான திணை. பனை, நெய்தல் திணைக்கான குறியீடு. பனைப் பொருட்களை நாமே உற்பத்தி செய்து, தரம் குறையாமல் சரியான விலைக்கு நுகர்வோரிடம் சென்று சேர்ப்பதை விருப்பமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.
இன்று, இன்னும் பல மரபு உணவுப்பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்வதாக வளர்ந்துள்ளது. இலாபம் ஈட்டுவது மட்டுமே இல்லாமல், மரபு உணவுப்பொருட்களை, அனைவருக்குமான உணவாக்கிட தனக்கான பங்களிப்பை செய்வதைக் குறிக்கோளாக கொண்டுள்ளது.

